ஆத்தோரம் காலாட
காத்தோடு கதைபேசி
நாத்தாட கைவீசி
நான்போக
சேற்றோடு என்மாமன்
மாட்டோடு மல்லுகட்ட
சோற்றோடு வந்த அத்தை
என்னை தீண்டாம
போயிருந்தா நானும்
பார்க்காம போயிருப்பன்
இப்ப என் மாமான் சாப்பிடாது
மல்லுகட்ட என்னை ஏன்
திட்டி கூப்பாடு போடுகிறாய்
நான் சாப்பாடு போடாமல்
போவேனா என் மாமானுக்கு!!!!
No comments:
Post a Comment