Saturday 7 November 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

ஏழ்மை என் சிறகுகளை
பிடிங்கிய போது வலிக்கவில்லை
பசி என் இளமையை
 பிடிங்கிய போது வலிக்கவில்லை
கருணையற்ற மனிதன்
கற்பனையில் கலங்கடிதபோது
வலிக்கவில்லை
எதிர்காலம் கற்பனையான போது
வலிக்கவில்லை
மகனே ! நீ என் நம்பிக்கையை
அறுத்தபோது மனசுவலிக்குதடா
அனாதையானதாய் துடிக்குதடா
யாருமற்ற வனமாகி
இந்த உயிர் தவிக்கு தடா
 இறுதி நம்பிக்கையும்   மண்ணில்
இறந்துவிட்டதாய் கண்ணீர் வடியுதடா
இருந்தும் உயிர் உனக்காய் இன்னும்
துடிக்குதடா!!

No comments: