Monday 10 August 2015

குருதிப் புனல்

நாம் தழிழரொன எழுந்திட்ட
 சிங்களே! 
ஆறுசுவை  உண்டு   அடுத்தவருக்காய் 
பேசி!நாட்காட்டிகள் கிழிக்கும்
 நாதியற்ற கொள்கைகளை வைத்து 
நாலுகால் கதிரையில் அமர்த்து 
ஐயா !நீங்கள் சிறையான
தேசத்தில்  எந்தகொடியேற்றபோகின்றீர்கள்!!
அபயமான தழிழாகி தேசத்ரோகியாகி
சட்டவிரோதக்கும்பலாகி  தீவிரவாதியாகி
தெருவில் விடபட்ட தழிழை நேசித்த
தமிழனாய்யிருந்தால் ஓன்றுமை
ஒன்றே வேதமெனயெடுத்து
ஒன்றையாவது அகற்றியிருபோமே!!
ஆளுமை கட்சியிடம் போராடி!!
நாளைய முத்துகள் இன்றைசொத்தையாகி
போதையில் விழுந்து காமத்தேன் குடித்து
சகதியில் சருகுகின்றதை  பார்த்தும்
தமிழா !நீ தழிழனாய் இருந்தும் 
குருடனாய் வாழும்போது
கட்சியமதைத்து  சட்டசபைபோய்
வெட்டியாய் கத்தியெதைசாதிக்க போகிறாய்!!
தன்னை தானே இழிவுபடுத்தி எதிராலியை
உத்தமனாய்  உயர்தி  தமிழை பதவிக்காய் 
பேசுவதை விட 
தழிழா  நீ அரசியல் ஊமையாகிவிடு!!
சாதிக்க முடியா தேசத்தில் தொலைத்திட
எம்மை  ஓர் தலைவன் தேடியெடுக்கம் வரையாவது
அடிமைமண்ணின் ஆடம்பரமாளிகைக்காக
நம் மாவீரகள் சாம்பலை அத்திவரமாக்காதிருப்போம்!!!




No comments: