Friday, 3 April 2015

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

சுமையற்ற ஓர் நாளை 
எனக்காய் படைத்திடுவாயா
 சுமையானவனே!
கருணையற்ற வலிகளை
ஓர்நாளேனும் சுமந்திடுவாயா
சுமையானவனே!!
இறந்திட முடியா இறக்கத்தை
இறங்கி 
எனக்காய் அனுப்பிடுவாயா
சுமையானவனே!
மண்ணில் உதிர்திட்ட 
மலருக்காய் உன் 
கருணைபாதமடியருள்வாயா
சுமையானவனே !
ஓய்வற்ற ஏழைக்கு ஓர் நாள்
ஓய்வாய் மரணத்தை பரிசாக்குவாயா
சுமையானவனே !
இல்லையென்ற வாழ்விற்கு ஓர்
இறுதியாசையாய் இதையேனும் காணிக்கையாகிடு
என் சுமையானவனே!!

No comments: