மங்களம் கரைந்து
கூரைப்படெரிந்து பலகாலம்
ஆனதையா!
பாவையிவள் வாழ்வில்!!
வாழ்த்தியோர் மறந்து
வாழ்த்தும் தொலைத்து பலகாலமானதையா
பாவையிவள் வாழ்வில்!
மழைவெள்ள மலராய்
திசையற்ற பாதையில்
பதறியவரும் பதறிதாம்கொண்டவரும்
மறந்த காலம் காத்திராது கரைந்தே போனதையா
பாவையில் வாழ்வில்!!
No comments:
Post a Comment