Wednesday 27 February 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

கனவச்சிறகு

பறந்த வேகத்தில் உதிர்த்த
கனவை எடுத்த வேகத்தில்
அழித்தது விதி

கொடுத்த அரும்பைக்கொண்டிடா
கொடியவாழ்வை  படைத்தது  விதி

இருந்த உறவை மிருமாக்கி
பிரித்து திரித்து பெருமைபேசி
புதிய பாதை கொடுத்தது விதி

இழந்த வாழ்வை  அழித்த உறவை
கருணையோடு  காத்தத விதி

காத்த உறவை தீயிலிட்டு
தனிமைக்கொடுமை தந்தது விதி

நலிந்த போதும் நலியாது
நாளும் பொழுதும்  துரத்தும் விதி

நாதியற்று தவிக்கும் போதும்
நாலுபக்கமாய் நிற்கும்  விதி

மரணம் ஒன்றோ நின்மதியென
உணர்ந்த போதும் தடுத்து காக்கும் விதி!!!!!

No comments: