Sunday 6 January 2013

வாழ்வு

படைத்தவன் எழுதியதை
திருத்திட எண்ணி
அழித்திட  முடியாபக்கத்தை
அழித்திட  எண்ணி
இருந்ததையும் தொலைத்து
இரவு பகல் அழுது எடுத்தது என்ன
கொடுத்தது என்ன  வந்தது என்ன
சிந்தனை என்ன இந்தவாழ்க்கையில்!!!
இருப்பதை விட்டு நடப்பதை விட்டு
வருவதைவிட்டு கிடைப்பதை விட்டு
விட்டு விட்டு போகும்வாழ்கையில்
எதைத்தடுக்க  ஓர் ஆட்டம்
எதை விரட்ட ஓர் ஓட்டம்
எதை அள்ள ஓர் போராட்டம்...................

No comments: