Sunday 29 April 2012

விழிகள்

சின்ன அருபுகளின் நடுவே
 மெல்ல  விரிந்திடதுடிக்கும் மொட்டுகள்
முட்டி மோதி மெல்ல வெளிவர
காத்திருக்கும் தோட்ட மணல்வெளி
 தன்னைப்பச்சைவர்ணம் போற்றி
அழகு காட்டி செழிக்கும் பசுமைகாலத்தின்
 ஓர் அந்திப்பொழு !
மெல்லத் தவழுகையில்!
அந்த பொழுதின் ரசனைக்குள்
தொலைந்த மனசு கரங்கொண்டு
 இறுக பற்றியே தன்னைப்பற்றியவளினை
அணைத்தபடியே ஒன்றையடி பாதையில்
இருவரும் தம்மைமறந்தே நடக்க!!
எங்கிருந்தே வந்த தென்றல்
உயரத்து மரங்களிடம் அப்படியென்ன
பேசியதோ சட்டென  இதழ்களைத்தூவி
ஒரு நிமிடம்  வாழ்த்திப் போக!!
உன் கைகளுக்குளே என்
உலகை வைதாய்  எண்ணிய
இயத்துடிப்பை உணர்ந்த மனசு
தன்ஆசைகளை உன் காதுகளில்
 மௌனமாய் சொல்ல 
உன்உணர்வுகளைில் கலந்த என்
உணர்வு 
 உன கண்கள்  என்னை ரசித்தபடி
ஏதேதோ சொல்லிடத் துடிக்க
புரிந்தும்  புரியாமலும் நான்
மனதிற்குள் ரசித்தபடி தவிக்க!!
அந்தநிமிடம் இந்த உலகில்
 யாருமே மகிழ்ச்சியாய்
வாழந்திடா ஒர் எண்ணம் தோன்ற
விழித்திட்ட என் கண்கள்
என்னைப் பாவமாய் பார்த்து
கேலியாய் சிரிக்க !!என் மனம்
கோவமாய் சினக்க   விழிகள்
           சொன்னது உன் கனவை நிறைவேற்ற               
                                                       என்னால் முடியாது என்று...................


No comments: