Thursday 26 April 2012

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

விளையாட்டு

படைத்தவன் மோதி மோதி
உடைத்திட்ட வெற்றியை
உடையவன் உண்மையின்றி
தொலைத்திட்ட வெற்றியை
விதி விரைதெடுத்து கணகிட்டு
பெற்றுகொண்டதாய்  எண்ணி
அழுகின்றது மனசு
மோதி மோதி களைத்திட்டதால்!!

வலி கொஞ்சம் கொஞ்சமாய்
கொடியோற்ற வர்ண வர்ண
கனவுகள் வெள்ளை கறுப்பாய்
ஆனதால் படிப்பும் பயற்று
கிடக்க அறியாமை சோம்பலுக்கு
குடைபிடிக்க நிழலின் சுகத்தில்
துயரம் சுகமாய் உறங்க
வெறுப்பு வார்தையாய்
கதைசொல்ல வாழ்கையின்றி
அழுகின்றது  தோல்வி வெற்றியை
 தொலைத்தாய் எண்ணி!!

இறையவன் படைப்பில்
எல்லாமே சுயநலம் பெற்றதாய்
எதையும் சிந்திக்க மறுக்கின்றது
அறிவு துன்பதின் பக்கங்களில்
நின்றுகொண்டு எதையும் செய்யாது
சந்தோஷபக்கங்களை வெற்றி
கொள்ளா   துயரமாய்
பிறப்பின் கணக்கு பாவம் என்று
கணக்கிட்டு சொன்னதால்
துயரங்களை துடைத்திட
நல்இதயமின்றி  பாவம்
வென்ற மனிதனுக்கு
கதைகதையாய் படிக்குது விதி!

No comments: