Friday, 7 October 2011

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

தென்றலின் வருடல்
சுறாவளியின் தொடுதலானது
விட்டிடாது  பற்றிய ஆணவம்!!..

இருவேற திசை காற்றில்
இருமனதின் மோதல் இன்பதின்
பாதையில் தேற்றிட்ட ஆணவம்!!....

பாதையோடு சேர்ந்து நடந்திட
முடியா இருகரை வழியில்
இருதயம்  இணைத்ததன் 
 வாதத்தால் தொலைந்த
 மகிழ்ச்சியின்கைப்பிடி  ஆணவம்.!!..

ஒன்றுக்கு ஒன்று
 போட்டியிட்டு ஒன்றை ஒன்று
 ஜெயித்ததில் கிடைத்த
வெற்றி தொலைத்தது
 புரியா ஆணவம்!!

நின்று கேட்டு நடக்கா 
தன்னை இழந்த
மனிதன் தொலைத்து 
எடுத்த கற்பனை
எழுதி முடித்த 
தன்னம்பிக்கை ஆணவம்!!!

முட்டி மோதியுடைத்த 
கருணையில்லா
தவமாய் தமிழன்   
பெற்றதாய் எண்ணிடும்
முட்டாள் சிந்தனையின் 
தோல்வி ஒருவருக்கும்
உதவா ஆணவத்திற்கே 
வெற்றியாகின்றது.............

1 comment:

சு.கஜந்தி said...

நன்றிகள்..............