Friday 7 October 2011

இசையின் சுவாசமாய் ஓர் சாரல்................,



 அசையும் காற்றின் அலையிடம்

மெல்ல கவியெழுதி கொடுத்தேன்


உறைந்த உணர்வின் நரம்பினை

மெல்லிய துளையிட்டு இசையொன்றை
இசைந்திட வேண்டி!!
அறுந்த உணர்வால் இறுகிய பாறை
 உன்னைக் கொஞ்சம்
அசைத்தசைத்து இழுத்திட!
எனக்காய்!! கொஞ்சம்
தென்றல் !
உதிர்த்த இசையில் அசைந்த
 உன் இதயத்தில் எழுந்த என்    சுவாசம்     
எங்கோ நான் தொலைத்ததாய்  
   உன்
 வார்தைகளாய் என் காதுகளில்
கடித்த நிமிடம் உறைந்தது என் உயிர்
அறுந்தது என் நரம்பு  இப்போ
இசையாய் நீயிருந்தும் கவியாய் நானிருந்தும்
ராகங்கள்    இசைத்திட முடியா     
வீணையாகின்றோம் நாம்!!!!!!


No comments: