Friday 21 December 2007

என் அன்பே....

கரைந்து ஏன் போகின்றாய்
என் அன்பே!
தண்ணியடித்து தாடிவளர்த்து
காதல் காத்து!! கரைந்து ஏன்
போகின்றாயா என் அன்பே


குடும்பம் மறந்து வாழ்வைத் தொலைத்து
வீதியில் நின்று வீண் காதலால்
கரைந்து ஏன் போகின்றாய்
என் அன்பே

உழைப்பு மறந்து
உயர்வைத் தொலைந்து
சோம்பறிக் காதலால் உன்னை
நீ கரைந்து! கரைந்து ஏன்
போகின்றாய் என் அன்பே

கரைந்து கரைந்து போவதா
காதல், அல்லவே அல்ல!
கரைந்திடா காதலை நீ தேடி
காலத்தோடு லட்ச்சியம் வென்று
வாழ்ந்திடு என் அன்பே காதலேடு
வாழ்வையும்.........

No comments: