Wednesday 28 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

தீப்பொறி தன்னை தன்னகத்தே
கொண்டு,தீச்சுவாலையோடு
கலந்திட்ட எம் உயிர்த் தியாகங்களே

உங்கள்
எண்ணற்ற சிந்தனை சிதறல்களை
ஒன்றாக்கி மாறாக் கொள்கையேடு
கனவிலும் தேசியத்தை வளர்த்து
உங்கள் உள்ளத்தின் ஆசைகளை
எமக்கு தந்து, எம் உயிர் காத்து!
மண்ணுயிர் மீட்டிட,மரணத்தின்
வாசலில் உடல் கொழுத்தி, எம் இருள்
போக்கிய தன்னலம் காணா தியாகங்களே!

உங்கள்
உயிரை துச்சமாய் தூக்கியெறிந்து
ஈழக் காற்றினை சுவாசக் காற்றாய்
சுவாசித்து உடலை எமக்காய் தந்த
உயிர் தியாகங்களே உங்களுக்காய்
கவிதைப் பூக்களால் கோர்க்கின்றேன்
ஓர் அஞ்சலி மாலை....

No comments: