Friday 21 December 2007

மீண்டு முழு நிலா

பாரியவன் காதல் கொள்ள
பெளர்ணமி நிலாவும்
கொண்ட காதல் உயிர்த் துடிப்பால்
தன்னிலை தான் மறந்து பூமிக்கு
வந்தது...

காஞ்சுபுரப் பட்டுத்தி
நெற்றித் திலம் தானிட்டு
மல்லிகையும் தலை சிரிக்க
கைவலயல் கலகலக்க
கால் கொலுசு சத்தமிட
அதிசய தேவதையாய்
அசைந்தே வந்தாள்
பார்ப்பவரே அசந்திட..

பாவையவள் கைதொட
பாரியவன் துடித்து நிற்க
முகிர்த்தமும் வந்ததென்று
தோழியவள் அழைத்து செல்ல
அதிகாலையும் வந்து நிற்க
மணப்பெண்ணும் தான் மறைய
ஏக்கம்கொண்டு அவன் பார்க்க
வானமதில் அவள் சிரித்தாள்
தன் ஒளி தானிழந்து
வெள்ளை பொட்டொன்றாய்.......

No comments: