Friday, 21 December 2007

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பாரியவன் காதல் 
கொள்ள
பெளர்ணமி நிலாவும்
கொண்ட காதல் 
உயிர்த் துடிப்பால்
தன்னிலை தான் மறந்து
பூமிக்கு வந்தது 
காதலால் ,,....

காஞ்ப்பட்டுத்தி
நெற்றித் திலம்
தானிட்டு
மல்லிகையும் தலை 
சிரிக்க
கைவலயல் கலகலக்க
கால் கொலுசு 
சத்தமிட
அதிசய தேவதையாய்
அசைந்தே வந்தது 
பார்ப்பவரே அசந்திட..

நிலவின்  கைதொட
பாரியவன் துடித்து 
நிற்க
முகூர்த்தமும் வந்ததென்று
தோழியவள் அழைத்து

செல்ல

அதிகாலை  புன்னகைக்க 
மணப்பெண்ணும் தான் மறைய
ஏக்கம்கொண்டு 
  அவன் பார்க்க
வானமதில் நிலவு  சிரித்தது 
தன் ஒளி தானிழந்து
வெள்ளை பொட்டொன்றாய்.......

No comments: