என் உயிரே உன் பெயரை
மூங்கில் காடு என்
காதோடு இசைக்க
தொலை தூரத்து
வானத்தைப் போல்
தொலைந்திடா நிலவாய்
உன் நினைவுகள்
வந்து வந்து போக
அந்தி
மாலைப்பொழுதை
வெறுக்கின்றேன்
உன் நினைவால்
***
என்னேடு கலந்திட்ட
உன் விம்பங்கள்
என் இதயத்தில்
முள்ளாய் தைக்க
என் உயிர்
உனக்காய் துடிக்கின்றது
உன் நினைவால்
***
உன் ஞாபங்கள்
என் மெளனத்திற்குள்
மீட்கப்படுகின்றது
ஏன் தெரியுமா?
அதுகூட சுகமான நினைவுகள்
என்பதால்.....
***
அன்பால் அவளைஅணைத்து
தன் இதயக்கோவில்
அவள் உருவம் பதித்தவனின்
சிதறுகின்ற கற்பனையும்
உதிர்கின்ற பூக்களும்
அவன் முகம் காட்ட
அவன் நினைவைச் சொல்லும்
அவள் கனவுகளை
தென்றல் காற்றிடம
சொன்னாள்
அவன் காற்றோடு இருப்பதால்
***
எப்படி முடிந்தது
உனக்கு என்
நினைவுகளை
மறந்திட..
எனக்கு
சொல்லி தர மறந்து
விட்டாயே
உன்
நினைவுகளை
நான் மறந்திட
***
என்
மனச்சிறையில்
அவன் நினைவுகள்
தென்றலால் பதிவு
செய்து
சுழல் காற்றாய்
சுற்ற.....
என்னை அவன்
தீண்டி
அவன் வாசத்தை
எனக்குள் சுற்ற விட்டு
என் இதயத்தின்
நாளங்களை அவன்
நினைவென்னும்
சுழல்காற்றால்
பிடிங்கிச்சென்று
மீட்டுகின்றான்
எனக்காய் யாழை
**
பசுமரத்தாணியாய்
அவன் நினைவு
எனைத் துரத்த
பார்க்குமிடமெங்கும்
அவன் உருவம்
விம்பமாய்த் தோன்ற
பாவையிவள் தவித்தாள்
கண்ணிருந்தும் குருடா
மூங்கில் காடு என்
காதோடு இசைக்க
தொலை தூரத்து
வானத்தைப் போல்
தொலைந்திடா நிலவாய்
உன் நினைவுகள்
வந்து வந்து போக
அந்தி
மாலைப்பொழுதை
வெறுக்கின்றேன்
உன் நினைவால்
***
என்னேடு கலந்திட்ட
உன் விம்பங்கள்
என் இதயத்தில்
முள்ளாய் தைக்க
என் உயிர்
உனக்காய் துடிக்கின்றது
உன் நினைவால்
***
உன் ஞாபங்கள்
என் மெளனத்திற்குள்
மீட்கப்படுகின்றது
ஏன் தெரியுமா?
அதுகூட சுகமான நினைவுகள்
என்பதால்.....
***
அன்பால் அவளைஅணைத்து
தன் இதயக்கோவில்
அவள் உருவம் பதித்தவனின்
சிதறுகின்ற கற்பனையும்
உதிர்கின்ற பூக்களும்
அவன் முகம் காட்ட
அவன் நினைவைச் சொல்லும்
அவள் கனவுகளை
தென்றல் காற்றிடம
சொன்னாள்
அவன் காற்றோடு இருப்பதால்
***
எப்படி முடிந்தது
உனக்கு என்
நினைவுகளை
மறந்திட..
எனக்கு
சொல்லி தர மறந்து
விட்டாயே
உன்
நினைவுகளை
நான் மறந்திட
***
என்
மனச்சிறையில்
அவன் நினைவுகள்
தென்றலால் பதிவு
செய்து
சுழல் காற்றாய்
சுற்ற.....
என்னை அவன்
தீண்டி
அவன் வாசத்தை
எனக்குள் சுற்ற விட்டு
என் இதயத்தின்
நாளங்களை அவன்
நினைவென்னும்
சுழல்காற்றால்
பிடிங்கிச்சென்று
மீட்டுகின்றான்
எனக்காய் யாழை
**
பசுமரத்தாணியாய்
அவன் நினைவு
எனைத் துரத்த
பார்க்குமிடமெங்கும்
அவன் உருவம்
விம்பமாய்த் தோன்ற
பாவையிவள் தவித்தாள்
கண்ணிருந்தும் குருடா
No comments:
Post a Comment