Sunday 23 December 2007

நினைவுகள்

என் உயிரே உன் பெயரை
மூங்கில் காடு என்
காதோடு இசைக்க
தொலை தூரத்து
வானத்தைப் போல்
தொலைந்திடா நிலவாய்
உன் நினைவுகள்
வந்து வந்து போக
அந்தி
மாலைப்பொழுதை
வெறுக்கின்றேன்
உன் நினைவால்

***
என்னேடு கலந்திட்ட
உன் விம்பங்கள்
என் இதயத்தில்
முள்ளாய் தைக்க
என் உயிர்
உனக்காய் துடிக்கின்றது
உன் நினைவால்
***
உன் ஞாபங்கள்
என் மெளனத்திற்குள்
மீட்கப்படுகின்றது
ஏன் தெரியுமா?
அதுகூட சுகமான நினைவுகள்
என்பதால்.....

***
அன்பால் அவளைஅணைத்து
தன் இதயக்கோவில்
அவள் உருவம் பதித்தவனின்
சிதறுகின்ற கற்பனையும்
உதிர்கின்ற பூக்களும்
அவன் முகம் காட்ட
அவன் நினைவைச் சொல்லும்
அவள் கனவுகளை
தென்றல் காற்றிடம
சொன்னாள்
அவன் காற்றோடு இருப்பதால்

***
எப்படி முடிந்தது
உனக்கு என்
நினைவுகளை
மறந்திட..
எனக்கு
சொல்லி தர மறந்து
விட்டாயே
உன்
நினைவுகளை
நான் மறந்திட
***
என்
மனச்சிறையில்
அவன் நினைவுகள்
தென்றலால் பதிவு
செய்து
சுழல் காற்றாய்
சுற்ற.....
என்னை அவன்
தீண்டி
அவன் வாசத்தை
எனக்குள் சுற்ற விட்டு
என் இதயத்தின்
நாளங்களை அவன்
நினைவென்னும்
சுழல்காற்றால்
பிடிங்கிச்சென்று
மீட்டுகின்றான்
எனக்காய் யாழை
**
பசுமரத்தாணியாய்
அவன் நினைவு
எனைத் துரத்த
பார்க்குமிடமெங்கும்
அவன் உருவம்
விம்பமாய்த் தோன்ற
பாவையிவள் தவித்தாள்
கண்ணிருந்தும் குருடா

No comments: