Sunday 23 December 2007

பிரிவு

எனக்காய் நீ தந்த
சின்னச் சின்ன
மகிழ்ச்சிகளை
நான் அச்சத்தோடு
ரசிக்கின்றேன்

ஏன் தெரியுமா?
சண்டை வந்தால்
எனைப் பிரிந்து
விடுவாயோ என்று!!

பிரிந்து பிரிந்து
பிரிவையே வெறுத்து
விட்டேன் அன்பே
உன்னை பிரியவேண்டாமே என
நான் பிரிந்தேயிருக்கின்றேன்
என்றும்.....

****
உறவோடு உனைத்தேடி
உறவாகி நானிருக்க
உறவே எனை மறந்து
பறந்ததேனோ

உன் பிரிவால் சுதியின்றி
நல்ல ஜதியின்றி
என் பாதம் நடை பழக
மறுக்கின்றதே...

என் உறவே
உன் விழிப்பார்வை
என்னைத் தீண்டாதோ
என் உயிர் உன்னைச்
சோராதோ....

No comments: