Sunday 23 December 2007

வாசம்

மலர் வாசம் வீசாயோ
தென்றல் காற்றே
கனிமொழியாள் படைப்பில்
கற்பனைக்குள் தோற்ற வாசம்
காலத்தால் அழிந்த வாசம்
இயத்தில் உறைந்த வாசம்
மலருக்குள் மறைந்த வாசம்
சுமையாக வந்த வாசம்
என்னோடு வாழும் வாசம்
எனை சுடராய் எரிக்கும் வாசம்
எவரோடும் தோன்றா வாசம்
புதைகுழியில் புதைத்த வாசம்
புதிராய் தோன்றிய தால்
என்னை வாசமில்லா வாசத்தை
சுவாசிக்க சொன்னது......

No comments: