Sunday 23 December 2007

மழை

என் மீது நீ படும்
போதெல்லாம்
என் உடல்
சிலிர்க்கின்றது
ஏனோ
நான் பூக்களாய்
நனைகின்றேன்
என்னை தொட்டு சிதறும்
உன் சிதறல்கள்
என்னை விட்டு பிரியா
கவிதைகளானது
***
தென்றலால் குளிர்ந்து
மழையென நனைத்து
வானவில்லின் வர்ணத்தோடு
பூமிதனில் பூத்து
சுவாசத்தை வருடி
நதியில் நடை பழகி
கடலில் கலந்து
சூரியத் தீண்டலால்
மீண்டும்
மேகமாய் மறைகின்றாள்!

No comments: