Tuesday, 27 November 2007

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

விதையாய் விழ்ந்து 
விருச்சமாய் எழுந்து,
விடியலுக்காய் வித்தான
முத்துக்கள் இவர்கள்

எட்டுத்திக்கும் விடுதலைக் காற்றனுப்பி
உலகின் பார்வையை 
தன்  பக்கம் திருப்பி
புரியா உள்ளங்களை 
புரிந்திடச் செய்து
கடலோடும் புயலோடும் 
தரையோடும்
தீயாக எரிந்து 
வானேறி வீரம் காட்டி
விதையான சுயநலமில்லா
 சுவாசத்தின் முத்துக்கள் 
இவர்கள்........

எம் மண்ணின் ஒளியெல்லாம்
அவர்கள் !
 முக ஓவியமாய் விரிய 
இருளுக்குள் ஒளியாகி,
இருண்ட வாழ்விற்கு 
வெளிச்சமாகி
வானத்திங்களின் ஒளியெடுத்து
உலகத்தின் பார்வையில் வீழ்ந்து
விடுதலை உணர்வை
 எம் இதயத்தில்
வித்தாக்கி மறைந்த 
எம் முத்துக்கள் இவர்கள்..................................

No comments: