Tuesday 20 November 2007

அழிவுகள்

தன் இனம் அழித்து
உயிர் எடுத்து
இரத்தத்தால் பூமி நனைத்து
மனுதர்மம் காக்கின்றது
யுத்தமென்னும் அழிவு

சுறாவளிக் காற்றாய்
சுற்றி சுழன்று
வேரோடு பிடுங்கி
வெற்றுடல் குவித்து
வேடிக்கை காட்டி
நிக்கின்றது ஓர் அழிவு

பூமி வெடித்து தீப்பொறி
எடுத்து பூவுடல் எரித்து
கடல் பொங்கி உடல் தழுவி
உயிர் குடித்து ரசிக்கின்றது
இன்னுமோர் அழிவு

இப்படி
அழிவின் மேல் அழிவு வந்து
அழிகின்ற பூமி தெரியாமல்
கற்பனையில் கிறுக்கின்றேனோ
பூமியின் அழகு தனை
புரியாமல்..................தவிக்கின்றேன்

2 comments:

Varikuyil said...

azivugalai aakkiya kavidhai. irapom endru therindhu pirakkirome...adhu pole.

சு.கஜந்தி said...

நன்றிகள்