தன் இனம் அழித்து
உயிர் எடுத்து
இரத்தத்தால் பூமி நனைத்து
மனுதர்மம் காக்கின்றது
யுத்தமென்னும் அழிவு
சுறாவளிக் காற்றாய்
சுற்றி சுழன்று
வேரோடு பிடுங்கி
வெற்றுடல் குவித்து
வேடிக்கை காட்டி
நிக்கின்றது ஓர் அழிவு
பூமி வெடித்து தீப்பொறி
எடுத்து பூவுடல் எரித்து
கடல் பொங்கி உடல் தழுவி
உயிர் குடித்து ரசிக்கின்றது
இன்னுமோர் அழிவு
இப்படி
அழிவின் மேல் அழிவு வந்து
அழிகின்ற பூமி தெரியாமல்
கற்பனையில் கிறுக்கின்றேனோ
பூமியின் அழகு தனை
புரியாமல்..................தவிக்கின்றேன்
உயிர் எடுத்து
இரத்தத்தால் பூமி நனைத்து
மனுதர்மம் காக்கின்றது
யுத்தமென்னும் அழிவு
சுறாவளிக் காற்றாய்
சுற்றி சுழன்று
வேரோடு பிடுங்கி
வெற்றுடல் குவித்து
வேடிக்கை காட்டி
நிக்கின்றது ஓர் அழிவு
பூமி வெடித்து தீப்பொறி
எடுத்து பூவுடல் எரித்து
கடல் பொங்கி உடல் தழுவி
உயிர் குடித்து ரசிக்கின்றது
இன்னுமோர் அழிவு
இப்படி
அழிவின் மேல் அழிவு வந்து
அழிகின்ற பூமி தெரியாமல்
கற்பனையில் கிறுக்கின்றேனோ
பூமியின் அழகு தனை
புரியாமல்..................தவிக்கின்றேன்
2 comments:
azivugalai aakkiya kavidhai. irapom endru therindhu pirakkirome...adhu pole.
நன்றிகள்
Post a Comment