Sunday 18 November 2007

உணர்வு தந்த சில கிறுக்கல்கள்..

ஈழத்து மண்ணே நான்
சில காலம் உன் மடியில்
வாழ்ந்திட வேண்டும்!
அகதி வாழ்க்கையில் நான்
தொலைந்த நின்மதியை
மீண்டும் தேடிட வேண்டும்!
இருக்கும் காலம் இனித்திட
விரைவில் நீ மலர்ந்திட
வேண்டும்...

*****************
ஈழமே நீ வேண்டும்
அதற்காய் நாங்கள் இங்கே
இனைந்திட வேண்டும்

வார்தையாலம் வீண்வாதம்
விட்டிட வேண்டாம்
தமிழர் நாங்கள்... மற்றவை
மறந்திட வேண்டும்

பசிக்காய் அழுதிடும்
குழந்தையின் அழுகுரல்
நிருந்திட வேண்டும்
இங்கே இனைந்திட்ட இதயங்கள்
நாங்கள் சூழ்நிலை அறிந்து
கரம் சேர்ந்திட வேண்டும்

**************************
உறவின் உயிரைக் காத்திட
முடியவில்லை
ஆனாலும் உணர்வில் ஓர் வலி
சொல்ல தெரியாவில்லை

உண்டேன் உறங்கினேன்
ஆனாலும் எதையோ இழந்ததாய்
ஒர் தவிப்பு எனக்குள்
என்னை
தொலைத்து கோழையாய்
இழந்த விட்ட தமிழ் உணர்வால்
துடிக்கின்றது இதயம்
எதனால் நானும் தமிழ் என்பதாலா
புரியவில்லை ராமா
ஆனாலும் நீயாவது
காத்திட தோன்றிடுவாயா?
கட்டத்தரையில் கண்ணீரோடு
என் உறவு .....வலிக்கு எனக்கு.........
****************
முள்வேலிக்குள்
இவனை
சிறையிட்டாலும்
இன்று சோர்ந்திடும்
இவன் இதயம்

நாளை ஒர் நாள்
முற்கம்பிகளை
உடைத்தெரிந்து
விரிச்சமாய்வெளி் வரும்

இவன் கண்களில்
இன்று தெரித்திடும்
தீப் பொறி நாளைய
விடுதலையை
சொல்லிடும் எரிமலைக்
காற்றாய் .......

****************
வீரரே உம் இரத்தத்தில்
முளைத்திட்ட
செடிகளெல்லாம்
உமாக்காய் பூக்கள் பூக்க
உம் மரணத்தால்
உதிர்ந்திட்ட வெள்ளை
மலரெல்லாம்
சிகப்பாய் பூத்திட்டது
உம் கல்லறையின்
பக்கத்தில் உறங்கிட
அல்ல
உம் கனவுகளை
மீட்டெடுத்து எம்
தேசத்தை காக்க.........
...................................................
தன்னுடல் தனை மறந்து
தனாக்காய் வாழாது
எமாக்காய் வாழும்
தியாக தீபங்கள் இவர்கள்
ஆனால்....
இன்று பூவுடலாய்
பூமியில் சரிந்த வேளை
இழிவின் மேல் இழிவு செய்து
கொடுமைக்கு மேல் கொடுமை
செய்து
அரக்கனாய் ரசிக்கும்
மனிதனின் மத்தியில்
மனித நேயத்தின்
புனிதம் சொல்லி
புனிதமாய் மறைந்தனர்
மறையா மறைவில்..
...........................................
வென்று சேரட்டும்
கைகள்
ஒன்று கூடட்டும்
இதயங்கள்
வெடித்து சிதறிய
மனிதநேயத்தால்
சிதறிக் கிடக்கும் எம்
உறவின் துயர்காத்து
இருளில் புதையும்
மண்ணின்
விடியலைத் தேடி
ஒன்று சேரட்டும்
கைகள்
..............................................
தமிழர்கள் நமக்காய்
ஒர் இடமின்றி
தவித்திட் காலம்
வென்று எமக்காய்
வரைத்திட்ட தேசத்தின்
புதிய பூபாலம்
எமக்காய் பிறக்க
நம் வீரர் உறுதிகொண்டு
இணைந்திடுவோம்
ஈழத்தின் தாகத்தோடு

2 comments:

குட்டிபிசாசு said...

கவிதை அருமை! வாழ்த்துக்கள்!!

சு.கஜந்தி said...

நன்றிகள் கருத்திட்ட உங்களுக்கு
என்றும்....