நினைவாய் கடந்ததே இரவு !ஏன்
இறப்பின் படிகளில் ஓவாய்
ஒரு பயனம் இருந்தும் வலிக்குதே ஏன்
எட்டநின்றும் என்னை மறந்து ரசித்தமுகம்
உமதோ!!தட்டித்த வேளையிலும்
தட்டிடாதே பார்த்த முகம் தானே!
நேர்கொண்ட பார்வை நேரெதிரே
நிற்க பயம் வரும் யாருக்கும்
கம்பீரக்குரல் கேட்டு பாதங்கள்
தடைபடும் தானாய் !அச்சங்கள்
அறியா மனசு அச்சப்படுவர் தவறுயிழைத்தவர்
கற்றவர் கல்வியாய் கற்பனையில்
கூட தவறிடமாட்டார் வாழ்க்கைகே வழியானார்
வாழ்த்தவர் பெருமை சொல்லானார்
வெற்றிலை சிகப்பழகில் சிந்திடும்
புன்னகை தவமாகும் ! கையில் பிடித்திடும்
தடியில் பல ஆண்மைகளின் வரலாறுண்டு
வியக்கின்றது விழிகள் விந்தை மனிதன்
கரம்பிடித்தே நடந்த நாட்களை சிந்தித்தால்
வரலாற்றுப் பொக்கிசம் விதியிடம் கைதியானது
எழுத்தால் எழுதா ஓவியம் எழுந்தே நிக்கின்றது
உயரமாய்!!!
No comments:
Post a Comment