இருள்வாங்கிய நினைவாய்
கடந்ததோ இரவு !ஏன்?
இறப்பின் படிகளில் ஓய்வாய்
ஒரு பயனம் !
இருந்தும் வலிக்குதே ஏன்?
எட்ட நின்று என்னை மறந்து
ரசித்தமுகம் உமதோ!!
தண்டித்த வேளையிலும்
தண்டிடாதே பார்த்த முகம் தானே!
நேர்கொண்ட பார்வை
நேரெதிரே நிற்க
பயம் வரும் யாருக்கும்
கம்பீரக்குரல் கேட்டு
பாதங்கள் தடைபடும் தானாய் !
அச்சங்கள் அறியா மனசு
கண்டு
அச்சப்படுவர் தவறுயிழைத்தவர்
கற்றவர் கல்வியாய்
கற்பனையில் கூட தவறிடா
வாழ்க்கைகே வழியானார்!!
வாழ்த்தவர் பெருமைக்கு
சொல்லானார்
வெற்றிலை சிகப்பழகில்
சிந்திடும் புன்னகை தவமாமானவர் !
கையில் பிடித்திடும்
தடியில் பல ஆண்மைகளின்
வரலாறுண்டு!!
வியக்கின்றது விழிகள்
விந்தை மனிதன்
கரம்பிடித்தே நடந்த
நாட்களை சிந்தித்தால்
வரலாற்றுப் பொக்கிசம் !
விதியிடம் கைதியாகி
எழுத்தால் எழுதா ஓவியமாய்
எழுந்தே நிக்கின்றது!!
உயரமாய்!!!
No comments:
Post a Comment