Wednesday, 24 June 2020

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................

முகமில்லா முகம் எடுத்து
யார் கனவையழித்ததுமில்லை
அழித்தவர் முகம் கண்டு 
அழுததுமில்லை
அடுத்தவர் வாழ்வை கெடுக்கவுமில்லை
கெடுத்திட ஒர்முகம் 
படைக்கவுமில்லை
பிறர்மனைபோக  
ஒருமுகம் 
மறைக்கவுமில்லை
பிறர்வாழ்வை பறிக்கவுமில்லை
மருந்தாகும் ரோஜா! | Rose is a medicine
பணத்திற்காய்  
 முகத்தனை 
மாற்றியதுவுமில்லை
பகைசோர்த்து யார்முகதையும்  
வஞ்சித்ததில்லை
இகழ்தவர் முகம் தேடியதுமில்லை
புகழ்தவர் நட்புமுகம் 
கொண்டதவுமில்லை
பிடித்தவர் முகம்மறந்ததுமில்லை
மறந்தவர் சொன்ன பொய்களை 
நம்பியதுவுமில்லை
ஏமாற்றி வாழ ஓர் 
 முகமுமில்லை
ஏமாற்றியவர்கண்டு ஓடியதுவுமில்லை!!!
முகமின்றிய வாழ்வில் 
முழுமையுமில்லை
முழுமையில்லா வாழ்வில் 
உறவுமில்லை !ஓர்
முகமில்லா முகதிற்கு 
முவரியுமில்லை
முகவரியற்ற முகத்தினை 
சிறையெடுக்கும் எப்பவும்
கல்லறையே!!!!கல்லறை கொடுக்கும்
முகமே கடசியில் நியமான முகமாகும்!!

No comments: