Thursday 9 March 2017

ஊமைக்குயில்............

கவிதைக்களம் தந்து  ஊமைக்கு மொழிதந்து
உயிர்விட்டு பொருள் தந்து  உள்ளதின் இதழ்தந்து
கண்னின் மணிக்கு  ஒளிதந்து குரலோடு இசைதந்து
உதடடிதிருக்க  கண்களுக்கு தமிழ்தந்து
இரவிற்கு நிலாத்தந்து உறங்கிடத் தலையணையாய் நீயாய்வந்தாய்1!!

வலியாகி விதியாகி மோதியாடும் நினைவலையாகி
அந்திவான ஏக்கமாகி நள்ளிரவின்  உறங்காவிழியாகி
விடியலுக்கு உதயமாகி  நானின்றி நீயாகி
 நல்லதெல்லாம் கெட்டதாகி பிரிவிற்கு மொழியாகி
துயரதிற்கு வரமாய் நீயாய் வந்தாய்!!!

சொல்லுக்கு சொல்லற்ற என்னையெடு்து
சொல்லாத பொருள் தேடியென்னைவதைத்து
செவியிருந்தும் செகிடாக வாழவைத்து
வாழ்வற்ற முற்கள்கொண்டு   பாதையமைத்து
உணர்வற்று  இறந்தே வாழ்ந்திட  நீயாய் செய்தாய்!!!

காலம் காத்திருக்க இளமைமலர்ந்திருக்க 
யார்செய்தபாவமே  தடுத்திருக்க  
வழியிரும் வாழா வாழ்கை தவித்திருக்க 
இறந்தென்ன நம் கனவு கண்ணிருக்க
இனிய பொற்காலம் தனித்தனியாதென்ன நாமிருந்தும்1!!!!




No comments: