Monday 2 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாறலில்............,

யுத்தத்தின் கையில் உறவு
பரிதவிக்க காட்ச்சிகள்
கண்களைக் குளமாக்க!

ஏன் இதுவென்று சற்றே
மனம் உடைய! உடைந்த
மனதை தட்டியெழுப்பி!!

எழுந்த உள்ளத்தை உறவாய்
இணைந்து !இணைந்த உறவின்
கரங்களை இறுகப் பற்றி!

பற்றிய கைகளுக்குள்
பதறிய நெஞ்சங்களை
சிதறாது அணைந்து!

அணைந்த உறவோடு
காயத்தால் தவிக்கும்
உயிரையும் தவிக்காது
அள்ளியெடுத்து!

எரிமலையாய் !!!!
தமிழ் எழுகின்றது!
மனதின் உறுதியால்
உயிரின் உறுதிவரை !

எதிரியின் எதிர்ப்பை
எதிர்த்தே நின்று உலகின் வெறுப்பை
உடைந்தே உரைத்து தமிழை
உதிராப் பூவாய் காக்க!!!

No comments: