Sunday, 8 March 2009

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

பழங்கதையின் உயிரென
சிலையெடுத்து
பத்தினியென வடிவமைத்து
உணர்வு கொடுத்து உணர்வு
மறுப்போரோ!! ஒரு முறை
அவளையும் பிறக்கவிடுங்கள்
குழந்தை முதல் கிழவி வரை!!!
சரித்திரம் தேடி சரித்திரம்
படைத்து சரித்திரம் கொடுப்போரே
ஒரு முறைவிடுங்களேன்!! அவளும்
பிறந்து அறிந்து அறியாமை அறிவை
அரவோ அகற்றி பிறக்கட்டும்
ஒரு முறை........
திசைகள் பல கடந்து
திசையின்றி வாழ்வதாய்
திசைகள் காட்டடி நிற்பவரோ!!
ஒரு முறை திறக்காத உங்கள்
கதவை திறந்திடுங்கள் தவரான
கதவையும் சரியாக திறந்து
ஒரு முறை அவளும் பிறக்கட்டும்
இருளுக்கு ஒளியாய்
குடும்பத்து விளக்காய்
ஒளியின் ஒளியாய் பிறந்தவளை
ஒளியின் நிழலென எண்ணி
நிஜம் மறந்து கதைப்பவரோ!!
ஒரு முறை தீபமாய்
எண்ணி எரியவிடுங்களேன்
அவளும் இவ்வுலகில் ஒளிரட்டும்

No comments: