Sunday 8 March 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

தன் நெஞ்சத்து காதலாய்
மண்ணை நேசித்து
தன் நெற்றி திலகமாய்
குருதியை நேசித்து
தன் வேலியின் தாலியாய்
விசத்தை நேசித்து
தன் அழகுடலின் உடையாய்
வெடி மருந்தை நேசித்து
தன் கைகளின் வர்ணப் பூசைப்போல்
ஆயுதங்களை நேசிந்து
தன் கருவின் உயிராய்
தன் மக்களை நேசிந்து
பெண்மை புயலாகி
மென்னை கல்லாகி !
ஒவியமாய்
தன் உணர்வை விடுதலையாக்கி
எல்லையில் நிற்கின்றாள்
எல்லாம் தன் உறவென எண்ணிக்கொடு
தன் உயிரைக் கொடுத்து
மண்ணுயிரைக் காக்க..........

No comments: