Friday 27 February 2009

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

  கல்லறையில் ஓர் பூ

கருவறையின் கருவோடு
கருவாகி கருவிடமே
கருவேண்டி கருத்தாகிய
கனிவான கண்மணியே
கண்னெதிரே தேன்றிய என்மணியே!

இந்த இதயம் உடைந்து
உறவு வெறுந்து
வர்ணப்பூவின் பனித்துளியாய்
வர்ணத்தோட்டத்தில்
சொந்தம் மறந்து சுகமும் மறந்து
கொஞ்சம் கொஞ்சம்
இறப்பவளின் கொஞ்சநேரத்து
கொஞ்சும் சுகம் தந்தாய்
கொஞ்ச நேரம் இந்த பூ மறக்க!!

நெஞ்சத்து கல்லறையில்
தலை சாய்ந்து துயில்கின்ற
என் கண்மணியே ஏனோ
வாசம் வீசாமலேயே துயில்கின்றாயே
எனக்குள்!!

No comments: