Friday 27 February 2009

உன்னாலே......

காலை உன் முகம் பார்த்து
 மாலை வரை மலர்ந்தேன்
உன் காத்தகண்ணால்
இதழ்விரித்து உன்னை ரசித்து
உன் திசையெங்கம் என்வாசம்
வீசிடசெய்தேன்  உன்வாசம் நானகயிருந்திட

உன்னைக் காணாதுபொழுது
 என் உயிர்  வாட
என் இதழ் மெல்ல புன்னகைக்க
 மறுந்திட சருகாய் கருகி
 இதழ்போல்லானது எனது தேகம்
 பார்த்தும் மறந்த கண்களின்
பாசத்தை பா்காது வந்த
பனிக்காற்றும் மழையும்
என்னைத் தொட்டெழுப்பிட

தொட்ட இடம் வலிக்க
மற்ற இடம் தவிக்க!
நீயின்றி   என் உயிர் உயிர் பெறாது
 தவிக்கின்றேன் உன்னால்!!

உன் உணர்வு என்னைத் தொட்டாமல்
என் உணர்வு என்னிலெழாமல்
உன் உணர்வுமற்று என் உணர்வுமற்று...
இன்று யாருக்கும் !
தெரியாக் கவிதையாகி
நான் மலரந்த வாசத்தை
உன்னால் இழக்கின்றேன்
என் சூரியனே .........

No comments: