Wednesday 30 January 2008

யுத்தம்

ஆட்சி செய்து
ஆட்சி செய்து
செய்யும் யுத்தம்
தன்னினம் தான்
அழிக்க செய்யும்
யுத்தம்

எல்லைபோட்டு
எல்லை போட்டு
செய்யும் யுத்தம்
எல்லையில்லா மனித
வாழ்வை சிதைக்கும்
யுத்தம்

வல்லரசு நாட்டின்
வல்லமை காட்டி
அடக்கு முறையால்
செய்யத யுத்தம்
வறுமை நாட்டின்
வயிற்றுப்பசி கண்ட
யுத்தம்


தீவிரவாதிகள் திவிரமாய்
செய்தும் யுத்தம்
மனிதவுயிர்கள்
சுக்கு நூறாய் சிதறும்
யுத்தம்

பேசிப் பேசி
கரைந்த யுத்தம்
கரைபட்டு போன
சமதான யுத்தம்

யுத்தம் யுத்தம்
என மனிதவுயிர்
செய்யும் யுத்தம்
எல்லைக்குள் நிற்காத
உயிர், காத்திடா யுத்தம்

பூமியின் சொந்தமென
வந்தவர்கள் செய்த யுத்தம்
மகிழ்ச்சிகளின் மரண
யுத்தம்

No comments: