Monday 28 January 2008

சிலை

அழகிய கடல் பயணம்
பாதி நீரில் தான் முழ்க

தப்பித்த சிலையொன்று
அலைமோதி அலைமோதி
உப்பு நீரில் அது தவிக்க

அந்த வழி வந்த அலை
அதையெடுத்து
கரையில் வீச

இதைக் காணாது
வந்தவர் போனவர்
கால் பட்டு கால் பட்டு
மண்ணுக்குள் அது புதைய

அந்த வழி வந்த இதயம்
அதன் அழகில் தான் மயங்கி
மார்போடு அணைத்துக்
கொள்ள...

தன் நிலை மறந்த சிலை
இழப்புக்கள் தான் மறந்து
தவிப்புக்கள் தனை மறந்து
அதன் அணைப்பில் சிரித்து
நிற்க...

இது தெரியா அந்த மனிதன்
அழகுப்பொருளோடு அழகுப்பொருளாய்
அடைத்தான் தன் வீட்டில்...

சோகம் தொடர சிரித்தது சிலை
தன் நிலையை தான் நினைத்து...

No comments: