Saturday 2 February 2008

கதிரவன்.....

அதிகாலை யன்னல் வந்து
சின்னச்சிரிப்புதிர்த்து
சின்னவளை துயிலெழுப்பும்
நீ! இன்று எங்கே சென்றாய்
என்னை மறந்து?

நித்தம் நித்தம் நீ வந்து
யன்னலோடு  கதைபேசி
வண்ணக் காதலை!என்
இதயத்தில் வளர்த்து விட்டு
இன்று ! எங்கே சென்றாய் என்னை
மறந்து?


காதலோடு சின்னவள்  உன்
வரவிற்காய் காத்திருக்க!
அவள் நினைவை மறந்து
இன்று நீ எங்கே சென்றாய்?

தேன்மொழியாள் வார்த்தையெல்லாம்
தேனெனச் சொல்லி விட்டு
தேன்மொழியாள் வார்த்தையின்
தேன் மறந்து இன்று நீ எங்கே சென்றாய்
என்னை மறந்து?

நித்தம் நித்தம்  வரவிற்காய்
சின்னவளை யன்னலில்
காத்திருக்க வைத்து விட்டு
இன்று ஏமாற்றி வாட விட்டு
வாடியவள் முகம் மலரந்திட
செய்யாது நீ எங்கே சென்றாய்
என்னை மறந்து?

No comments: