Monday, 28 January 2008

செவ்வாய்க் கிரகம்

கண்ட உருவம்
கடவுளோ கற்சிலையோ
பொன்ணோ மண்ணோ
கற்பனையோ சித்திரமோ
தந்திரமோ மந்திரமோ
எனக் குழம்ப

செவ்வாய் பெண்ணே
செவ்விதழே நீ செவ்வாயில்
ஏன் தோன்றி சாத்திரதத்தில்
வந்தமர்ந்தாய்..

உன்னால்
எண்ணி எண்ணிக்
கட்டம் பார்த்து
வந்து வந்து வரன்கள் போக
திருமணபந்தங்கள் குழம்பிக் குழம்பி
குழப்பம் கண்டதால்

இஙங்கே உன்னை
கற்சிலையாய் வடித்து
பாலும் தேனும் உனக்கழித்து
வருந்தி வருந்தி மனிதன் வாடி
வயது தாண்டி வாழ்கை தாண்டி
தேடித் தேடி ஓய்ந்தவர்
உன்னை வெறுக்க

நீ மட்டும் எப்போதும்
குழப்பவாதியாய் இருப்பது
ஏன் செவ்வாயே...?

No comments: