Wednesday 9 January 2008

மெளனம்

அவன் சொன்ன மெளனத்தை
அவள் கேட்டு மெளனமானாள்

அவன் ரசித்த மெளனத்தை
அவள் சூடி மெளனமானாள்

அவன் தவித்த மெளனத்தை
அவள் புரிந்து மெளனமானாள்

அவன் சிரித்த மெளனத்தை
அவள் ஏந்தி மெளனமானாள்

அவன் கொடுத்த மெளனத்தை
அவள் தாங்கி மெளனமானாள்

அவன் நேசித்த மெளனத்தை
அவள் வளர்த்து மெளனமானாள்

அவன் வெறுத்த மெளனத்தை
அவள் அணைத்து மெளனமானாள்
.... ..... ...... ...... ....... ...... ...... ..... ....... ....

2 comments:

Aruna said...

அப்பாடி இவ்வளவு மெளனம்???? மெளனம் கூட இவ்வளவு அழகானதா?
அன்புடன் அருணா

சு.கஜந்தி said...

நன்றிகள் மெளனத்தின் அழகை
மெளனமாக ரசித்து சென்ற
உங்கள் மெளத்திற்கு .....