தனிமையே
என்னை சிறையெடுத்திட
ஓடியே வா என்னிடம்!!
காலங்களில் தொலைந்திட்ட
என் கனவினை சுமந்திட
தேடியே வா என்னிடம்!!!
காயங்களை எழுதிய விதியினை
காயப்படுத்திடாது பாடிட வா
என்ளிடம் !!!
மாறிடா வாழ்கையினை
மறந்திட மாற்றமாய்
ஆடிடவா என்னிடம்!!!
சிரித்தவள் மலர் முகம் வாடிட
உன்னை தந்து என்னை
அணைந்திட வெற்றிடமாய்
வா என்னிடம்!!!
சிந்தனை சிற்பத்தை செதுகிட
என் சின்ன இதயத்தின்
உயிர் தமிழ்த்தித்திப்பாய்
வா என்னிடம் !!!
களைத்தவள் கேட்கின்றேன் கலையே நீ
காணல்நீர் கரையின் தாகமாய் வா
என்னிடம்!!!!!
No comments:
Post a Comment