Monday, 10 April 2017

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்............,

வாழ்த்துகள்  தந்து
வாழ்கையை வாழ்ந்திட
சொல்கின்றாள் என்னையும்  அன்னை
ஏனோ தெரியாது!!!

உண்மையை நேசித்து  
உன்னையே நீ வென்றிடு 
சத்தியதின் வழியாய்
என்றென்னை வாழ்த்துகின்ற
என் அன்னையால் !
வாழ்கின்றது வாழ்கை
ஏனோ தெரியாது!!!

உறங்கிடும் நிமிடம் தவிர
உறங்காகப்பாசம் கொண்டு
என் அன்னைக்கு மகன்களாய்
என்னை தந்தெடுத்த மாமானுக்குள்
 ஆயிரம் வாழ்த்து மாமியேடு  எனக்காய்
ஏனோ தெரியாது !!!

ஒன்றை தாய் சுமப்பில் 
ஒன்பது தாய் அள்ளிசுமக்க 
அத்தனை பாரமும்
மறந்து வாழசொல்லுது அன்னைகளின்
வாழ்தென்னை ஏனோ தெரியாது !!!


சுற்றிய நட்ப்பாய்
 என்னை சுற்றி வலம்வந்து
என்னை தாய்யாக்கிய
 என்மகள்களின் மகன்களின் உணர்வில்
  என் உயிரின்  மூச்சுவலம் 
வருகின்றது வாழ்த்தாய்
ஏனோ தெரியாது !!!

மருமகன்களாய் வந்து  
மகன் களாய் தலைப்பாகையின்றி 
தலைசுமக்கும் தலைமகன்களின் 
பாசத்தால் வந்த வாழ்த்தால்
என் கண்ணீரில் மலர்கின்றது வாழ்கை வசதமாய்
ஏனோ தெரியாது !!!

அதிகாலை உறக்கம் கெடுத்து
அதிகாரம் பாசகொண்டு அன்பைாய்
வாழ்த்தி விட்டு அவரமாய் மறைந்த
நண்பனால் வாழச்சொல்கிறது வாழ்கை!!!
ஏனோ தெரியாது !!!

எத்தனை துயர்வந்தாலும்
 தன்னைத் தொலைத்து
என்னை காக்கின்ற இதயதிற்கு 
தெரியாமலேயே 
போன தியகத்தின் வழி வாழ்த்தாய்  என்னைவாழச்சொல்கின்றது
 ஏனோ தெரியாது !!!


No comments: