Saturday 19 April 2014

அகவை 2

அஞ்சி அஞ்சி வாழ்ந்த தமிழ்
அஞ்சாமை அறிவின் சுடராய்
அயல் நாட்டு தடைகளில் நிற்காது
அஞ்சகத்து வார்த்தைகளை தனக்குள்
அள்ளிவைத்தெழுகின்றது துளிராய்!!

 உறவின் விழுதுகளால் ஒன்றுபட்டு
உயிரின் துளிர்ப்பை தாய்மொழியாக்கி
உண்மை நெருப்பின் வேங்காய்
உலகின் கண்களின்  காட்சிக்கு
உரிமை குரலாய் துளிர்கின்றது!!

கள்ளம் கொண்ட மனிதனின்
கற்றவித்தைக்கொடியில்
கபடமின்றிசுற்றிக்கொண்டு
கருணைகொண்டேர் கைகளினுடே
கண்ணின் பசுமையாய் துளிர்கின்றது!!!

செங்குருதி மண்ணில் வீசி
செந்தணல் காறறில் புரண்ட
செந்தமிழ்!  சிந்துநதிக்கரைதனில்
செழிதெழுந்திட எழுகின்றது
செங்கதிர் வீச்சின்  துளிராய்!!

விலங்குவுடைத்து  புதுப்பாதை நெய்து
விதியென வீதி புதைந்த நேயம் கொண்டு
விவகாரமாக்கிய விவாத்தின் மேல்னின்று
விடியல்பொழுது சூரியனைப்போல்
விரைந்து எழுகின்றது  துளிராய்!!!!

வஞ்சம் கொண்ட நெஞ்சத்தது
வஞ்சும் வார்தையின் உதிரத்தில்
வையகத்து அணல்க்காற்றில்
வைத்தகொள்கை மாறிடாது
வைகை நாணால் துளிராய்யெழுனின்றது !!

சொந்த மண்ணின் காயத்தில்
சொத்து சுகங்கள் மறந்த தமிழ்
சொந்த தேசத்து விடியலுக்காய்
சொத்தம் சொல்லி துளிர்க்கின்றது  விடுதலையாய்!!!



No comments: