Saturday 20 July 2013

ராதையின் விழி பேசும் சாரல்,

காதல்பெண்ணிவள் கண்ணன்
கைகளுக்கே கவியனவள்!
கூடலும் ஊடலும் இவளின்
காதலுக்கே தனியழகு
கோடிமலர்களில் கண்ணன்
கொஞ்சும் மலரழகு
பாரினில் இவள் போல் ஓரழகு
கண்கள் காண மனழகு!!

கண்ணன் தீண்டிபார்கையில்
ஆகாக !!நாணசிரிப்பழகு
கூடிப்பேசையில் கூடுவோர் முகழகு!
பாவையிவளின் பால்முகம்
பார்க்கையில்   மீண்டிடா
தனியழகு !கண்ணன்
காதலுக்குள் வாழ்வாய்வாழ வாழ்வழகு
கண்ணன் மலரிக்குள் நிற்கையில்
மலர்முகசிரிப்பில் இவளழகு
கண்ணன் குழலொடு சேர்கையில்
இதயத்து இசையழகு
கண்ணன் மார்வோடு சேர்கையில்
வைத்துப்  பொருளழகு
கண்ணன் கைபிடித்து நடக்கையில்
அமைதி வாழ்விற்கு சகியழகு
கண்ணன் துன்பத்து துடைக்கையில்
இன்பத்து சுவையழகு
கண்ணன் கொண்டிடடும் துணையழகு
இணையழகு
இருவாழும் காதலே தனியழகு!!!

No comments: