Friday 19 July 2013

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

ஊமையான உணர்வுகள்
மௌனமாய் அழுகின்றது
என்னுள் ஏன் !!
தொட்டமடிதொடரா
நினைவுக் காலம்அழித்தகனவு
மாறாமல் என்னுள் ஏன்!!
விழிமூடா சோகத்தின் வழியதை
வலியாக எழுதியவிதி
வரைந்த ஓவியமானது
என்னுள் ஏன்!!
வர்ணங்கள் இழந்து தனியாய்
தவிக்கு புலம்பலும் புது காலத்தின்
சிதைவாய் என்னுள் ஏன்!!
பாவியாய் பிறந்தாலும் மண்ணில்
பாவையாய் பிறந்திடலாகாது
கோடியின்னல் தாங்கி
கொடுமையான வாழ்விலும்
நிழலாய் துரத்துவது ஏமாற்றமும்
மாற்றமே இல்லாவாழ்வுமே
என்னுள் ஏன்!!
யார் யாரோ சொன்னார் போராட
போராடி போராடி பெற்றதெல்லாம்
மனதின் காயத்து வடுக்களாய்
தோண்ற தோண்ற என்னுள் ஏன்!!

காலத்தால் பெற்றகாயத்தால்
மற்றவர் சொன்னதெல்லாம்
பாவிசெய்த பாவத்தால் வந்த
கொடுமைகளாய் இன்னும் என்னுள் ஏன்!
பாவியிவள் செய்த பாவம் தான் என்ன!!
மண்ணில் பெண்ணாய் பிறந்ததை தவிர!!



No comments: