Thursday 7 March 2013

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

ஊரும் உறவும்
உருக்கழிந்து போயாச்சு!!

போக்கிடம் தனையிழந்து
அயல் நாடும் வந்தாச்சு!!

சிக்கிய உறவும்
இருக்குமே இல்லையே நமக்கு
தெரியாது போயாச்சு!!

வலுவான வரலாறும்
வாழாது அழிஞ்சாச்சு!!

ஆழ்வதும் வாழ்வதும்
தெரியாமல் போயாச்சு

புரியாது தவிந்திடும்
என் தமிழனே எழுந்திடு
எம் மானம் தன்மான
அடகுக்கடை பாத்திரமாயாச்சி!!

உடலின் உதிரத்தில் ஓடும்
அக்கினித் தீயல்லவா நீ!!

வெற்றிப்பாதை கண்ட தமிழன்
 விட்டதை வென்றிட
தலைவன் பாதை வருவான்!!

புரட்சியும் எழுச்சியும்
திவிரவாதமும் தந்தவனுக்கே
திருபி கொடுத்து எடுத்து
என்றும் நம்மை நாமே ஆழ எழுந்திடு
!!

No comments: