Wednesday 1 July 2009

கீற்றுகுள் இருவிழி தூறல் சாரலில்............,

அவையங்கள் அவையிழந்து
அவையில்லா அவையங்களின்
வலியோடு சிதைகின்ற உடலில்
வடிகின்ற உதிரமாய் உதிர்கின்ற
உணர்வை தொட்டெழுப்பும்
ஈயும் எறும்பும் விட்டிடாதா என
ஏங்கும் ஏக்கத்தை தட்டி விட
முடியா தவிப்பாய் தொட்டவலியும்
விட்டிட சோகமும் கொட்டக் கொட்ட
கொட்டிய வாழ்வை
தட்டிய தர்மம் சத்தமில்லாது
சொல்லுது சூது கவ்வியதாய்..

No comments: