Thursday 2 August 2007

மனிதன்

உலக மென்னும்
அற்புத படைப்பின்
அழகிய பொய்கள்
நாங்கள்
அறிவு கொண்டு
அழிவை நேசித்து
போலி கொண்டு
நிம்மதியழித்து
இன்பம் தேடி
துன்பம் நேசித்து
காலம் தனை
காகிதக் குப்பையாக்கி
மரணம் கொண்ட
மாய வாழ்வின்
உதிர்ந்த இதழின்
கற்பனை கொண்டு
வாழ்வின் சரித்திரத்தை
இறந்த உயிரின்
இரத்தத்தில் எழுதுகின்றோம்

No comments: