Thursday 16 August 2007

கிறுக்கல்கள்,

உண்மைக் காதல்
ஏட்டில் வடிக்க
பொய்மைக் காதல்
வாழ்வைச் சிதைக்க
புரியா உணர்வில
தெரியா உறவாய்
சேர்ந்த காதல்
கல்லறைக்குள் வாழ
இறப்பின் சிறப்பு
காதலில் தெரிய
கண்ணீரால் நனைந்த
காதல்
கல்லில் செதுக்கிய
காவியமானது...

*******************
பத்து மாத கருவை
சுமந்து பட்டினியும்
வலியுமாய் ரசித்திடும்
பெண்ணவளின் நளிங்கள்
மீது எனக்கு
ஒர் காதல்

சிந்தும் சிரிப்பில்
சிதறும் அழகில்
மென்பஞ்சு மொட்டு
அசைந்திடும் அசைவில்
தொலைந்து நிற்குது
என் காதல்

வறுமைத் துயர்
தான் தாங்கி
பிரியா உறவாய்
சேர்த்தே நிற்கும்
உறவின் மீது
எனக்கும் ஒர் காதல்

முதுமை வந்தும்
மாறக் காதல்
தாம் கொண்டு
சேர்ந்தே ரசிக்கும்
ஜோடி மீதும்
எனக்கும் ஒர் காதல்
*****************
அழகின் கவர்ச்சியின்றி
பார்வையின் மோதலின்றி
எனக்கும் அவனுக்கம்
ஏற்பட்ட காதல்
சொல்ல முடியா கதைசொல்ல
என் உணர்வில் கலந்திட்
அவன் வசம் என்னை
காலமுழுக்க சுவாசிக்க
சொன்னது
*****************
நான் மழையைக்
காதல் செய்ய
மழை பூமியைக்
காதல் செய்ய
பூமி அழகைக்
காதல் செய்தால்
மனிதன் அழிவைக்
காதல் செய்கின்றான்

No comments: