Sunday, 12 April 2020
விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,
நந்தவனம் தனில் ஒரு சில்வண்டு
றீங்கார சுகராகம்
தந்ததென்ன விளையாடும்
மனதில் ஒரு விளையாட்டு அழகாய்
என்னை திரும்பிட சொன்னதென்ன
என் அழகான நாட்களை
வரைந்ததென்ன
விடியதே விழித்த
பொழுதினை உறங்கிடாதே
விழித்திட செய்ததென்ன
வரையாத உயிரின் ஓவியதை
மீண்டும் வரைந்திட சிந்திக்க
வைத்தென்ன
உறவாடிய தென்றலின் மொழியினை
கவியாக தந்ததென்ன அழகான
நினைவதனை விளையாட்டாய்
விதிசெய்த மாயமென்ன கடந்திட்ட
அலையதனில் கரைசேர்த்த அலையின்
ஓசைகளே காதல்!!!!
Friday, 10 April 2020
என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,
இன்பத்தோடு துன்பமாய்
இருளோடு ஒளியாய்
எண்ணத்தோடு கவலையாய்
புன்னகையோடு வலியாய்
சாபத்தோடு சாபமாய்
போனதையா காலங்கள்
வாழ்வோடு வருத்தமாய்
என்னோடு கோவமாய்
இருந்தும் மலரோடு நேசமாய்
இறையோடு தோஷமாய்
மரணத்தோடு காதலாய்
இளமை தொலைத்து
முதுமை வந்ததே தனாய்
எத்தனை தடைகள் எத்தனை
எத்தனையென தேடிபார்கின்றேன்
என்னையே காணவில்லை!
இருந்தும் எனோ உயிர் நெடிகள்!!
Subscribe to:
Posts (Atom)
