Saturday 22 June 2013

நிலைநடுக்கம்

விட்டுவிடதே தொட்டுவிடதே
விட்டகலாது தொடரு!!
காத்திடமுடியா போனாலும்
விட்டு விட்ட தேசத்தை
 கட்டிக்காத்திடாது!!

எட்டிபிடித்தவன்   நம் தேசத்தை
எட்டு எட்டாய் விற்றாலும்
எட்டி நிற்று சுகந்திர காற்றை
 சுகந்திரமாய் சுவாசிக்க
விட்டு விடாது பேசு சுகந்திரத்தை!!!

கட்டு கட்டாய் கொடுத்தவன்
கட்டி கட்டி எடுப்பதெல்லாம்
தமிழன் சுவாசத்தையென்றாலும்
மிஞ்சிகிடத்தவன் அஞ்சி அஞ்சி
வாழும் வாழ்வில் எஞ்சிய உயிரும்
எச்சமாகும்வரை  கொள்கைதனை
விட்டிடாது பேசு!!

அடிமைத்மிழன்முதுகில் ஏற்றிய
கடனுக்கு ஊற்றி மதுவாய்
கூன்விழுந்து சுமக்கும் பாவிகளாய்
தமிழன் இருக்கும் வரை
யாருக்குசொந்தமின்றி போகும்
தேசத்தை எண்ணி எண்ணி பேசு
எதையும் விட்டிடாது பேசு !!

பறிதவனுக்கும்  கொடுத்தவனுக்கும்
இன்றி இடையில் ஒருவன் எடுக்கும் வரை..
விட்டிடாது பேசு !!
பேசிபேசி கெடுத்ததை கேட்டு கேட்டு
இழந்தை காத்திடாது!!!!!








No comments: