Monday, 8 April 2013

விழி கண்டு மொழி பேசும் சாரல்.......................,

காலத்தின்  வறட்சி
வாழ்கையின்  வசந்தம்
தேடலின்  தொலைவு
ஏழ்மையின்   எதிர்ப்பு !இருந்தும் 
இவள் இனிமையின் 
கனவு!!
அழுகையின்  சொந்தம்
அறியாதவர்  சந்தோசம்
அறிந்தவர் நின்மதி
தனிமைக்குத்துணை இருந்தும் 
 
இவள் இனிமையின்
 கனவு!
காண்பவர்  தேடல்
கருணையற்றவர் சொத்து
ஊனத்தின் கண்கள்
பாலைவனத்தின் பசுமை இருந்தும் !
இவள் இனிமையின் 
கனவு!
முற்களின் முகவரி
கற்களின் பாதசுவடு
கடலின் உப்பு
கானலின் தண்ணீர் இருந்தும் 
இவள் இனிமையின் 
கனவு!
உறவின்  வெறுப்பு
புத்திக்கு   பெண்மை
தாய்மையின்  கண்ணீர்
விசத்தின் தேன் இருந்தும் 
இவள் இனிமையின் 
கனவு

No comments: