Wednesday 17 April 2013

இளந்தளிர் அகவை1



எதிர்எதிர் திசையில்
எதிரியாய் நிற்காது
ஒற்றை நிழல் குடையின் கீழ்
இளையோர் நாம் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!

சிதறிய மனிதர்களை சோர்த்து
ஓடிய மனிமர்களை தடுத்து
அறிவுள்ள மனிதர்களை அருகமர்த்தி
இளையோர் நாம் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!

இளமைத்துள்ளளோடு
பண்பாட்டை காத்திட
தமிழ்த்தாய்பிள்ளைகள் நாம்
தமிழுக்காய் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!

சங்கத்தமிழ்காத்த தமிழினம்
சங்கறுத்தாலும்வீழ்த்திடாதென
சங்க தமிழனாய் சங்கம் வைத்து தமிழ்காக்க
இளையோர் நாம் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!


சுற்றி நின்று பகை சுட்டாலும்
சுடுகாட்டு சாப்பலாய் போனாலும்
சாம்பலில் இருந்து உயிர்த்து
இளையோர் நாம் எழுகின்றோம்
மனித இருள் நீக்கும் தீபங்களாய்!


அஞ்சும் தமிழினத்தின் அச்சம் களைந்து
அச்சமில்லா  அஞ்சாமை ச்சுடராய்
சிந்தனை தெளிவோடு ஓறைஓளிதீபங்களாய்
சற்றும் தயங்காது  இளையோர் நாம்
 எழுகின்றோம் எம்மண்ணின் ஒளித்தீபங்களாய்

No comments: