Tuesday, 15 September 2009

இல்லாள்

ஏந்தியவன் எதுகை மோனையாய்
ஏந்தியவளைக் கவி பாட!!
இல்லா உலகத்தின் இல்லா
பொய்யாய் கொண்டவன்
கை பற்றினாள் காதலால்!!

சுமையோடு கசப்பு
சுகமான சுவையானதால்,
பொறுமையும் சகிப்பும்
பெண்மையென்று மாற!!

நிலையான கனவில்
நிலைபெற ஆசைகள்
வந்து வந்து போக
பிள்ளையோடு கனவன்
புகழ்மாலையும் சூட!!

இருபதும் ஆறுபதும்
இல்லாது தொலைய
இருந்தும் வாழும்
தொலையா கனவு
கண்ணீரில் கரைய!!
மறுமறுஜென்மத்தை தேடுகின்றாள்
மறுபடி பிறந்து ஜெயிந்திட.......

No comments: