Friday 4 September 2009

என்விழிகளுக்குள் சிக்கிக் கொண்ட அகமும் புறமும்




அகம்
உயரத்தையடைத்தால்
இருளோடு தனிமையாகி
என்வாழ்வை தொலைத்து
புகழின் கைகளுக்குள்
பாராட்டின் கைதட்டலாய்முமை வந்தும் ஓடிஒடி அலைகின்றேன்

நால்வரின் நல்லதும் கெட்டதும்
முதுகில் சுமந்து கொண்டு
மனைவிடம் நாலுவர்தையின்றி
குழத்தை தன்னை  தூக்கதில் கொஞ்சிய படி
 உலகிற்கு அறிமுகமான நான் வீட்டிற்கள்
அறிமுகமின்றி...................


புறம்
இறை கொடுத்தால்  அவன் சாதித்தால்
இன்று போகுமிடமெங்கும்
சிறப்பு பிறந்திட்டால் இப்படி
பிறந்திட வேண்டும் உலகில்
இறந்தாலும் வாழ்ந்தாலும்
சிறப்பாக வாழ்வதற்கு இவனல்வா
 முதல் உதாரணம்!!!


                                                               அகம்
இழந்த கனவை
நெற்றி வியர்வையாக்கி
வந்த கவலையை கூடைக்குள்ளிட்டு
 ஓடி ஓடி உழைந்து
ஓடெனத்தேய்ந்து
ஒவ்வொரு குழந்தையாய்
 கரையேற்றிய கூலிக்காரி நான்
 இப்போது யாருமில்லா தனிமரமாய்போனேனே!!

புறம்

உடல்சுருங்கி !கண்மயங்கி
பல்விழுந்து! காலம் கடந்தும்
கிழவி இன்னும் இருக்குது பார்
பூமிக்கு பாரபாய் !!
எடுத்ததை எடுத்தயிடத்தில் போட்டு!
அடிக்கடி லீவு போட்டு
வந்து வந்து போக எவ்வளவு கஸ்ரம்!
கிழம் போய்விட்டால்!! அப்பா எவ்வளவு நின்மதி!!

************************


அகம்


என் காதலை நீ
எரிந்துக் கவியாமாக்கியதால்!!
உன் வலியை தாங்காது
என் விழிகள் எப்போதும்
அருவி நீரையே கொண்டுது !!



புறம்

அழகு தேடி அடைக்கப்பட்ட
கருவிழி வழியின்றி
வலிதாங்காது வடிக்கின்றது
கண்ணீரை அருவியாய்!!

No comments: