Friday 8 July 2011

என் இலக்கணபிழைகளில் ஓர் இலக்கியம்,

காத்திருக்கின்றேன்.......

புன்னகைத்துப் பூக் கொத்தேந்தி
என்னைத்தேடிடும்
உன்னை வரவேற்று காத்திருக்கின்றேன்!!
எப்போ!! என்னைக் கொள்ளையடித்து
கொண்டு போக வருவாய்!!
இந்த மனிதரைப்போல்
 வஞ்சித்து ஏமாற்றி
வதையிட்டு ரசித்து
பொய்யாய்  கதையிட்டு
சித்திரவதை செய்து
நாடகமாடாது  !   
தாலாட்டி உறங்க வைத்து
மெல்லத் தூங்கவைத்துத்தூக்கி  போக
 வருவாயா?மரணமே
உனக்காய்! காத்திருக்கின்றேன்!!!!        

No comments: